புதுடெல்லி: மக்களவை துணை சபாநாயகராக கடந்த 2004 முதல் 2009ம் ஆண்டு வரை ஷிரோமணி அகாலி தளம் கட்சியை சேர்ந்த சரண்ஜித் சிங் அட்வால் பதவியில் இருந்தார். இவர் பாஜ தேசிய தலைவர் ஜேபி நட்டா முன்னிலையில் நேற்று பாஜ.வில் சேர்ந்தார். இவரது மகன் இந்தர் இக்பால் அட்வால் கடந்த மாதம் ஷிரோமணி அகாலி தளத்தில் இருந்து விலகி பாஜ.வில் சேர்ந்தார். அவர் தற்போது காலியாக இருக்கும் ஜலந்தர் மக்களவை தொகுதியின் பாஜ வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில், தந்தை அட்வால் பாஜ.வில் சேர்ந்தது வரும் 10ம் தேதி ஜலந்தர் தொகுதியில் நடக்க இருக்கும் இடைத்தேர்தலில் கட்சிக்கு வலுசேர்க்கும் என்று கூறப்படுகிறது.
The post பாஜ.வில் இணைந்தார் மாஜி துணை சபாநாயகர் appeared first on Dinakaran.